Thursday, January 01, 2009

சிங்களத்தானால் இந்தியர்கள் (தமிழர் அல்லாதோர்) தாக்கப்பட்டுள்ளார்களா?

இந்திய இறையான்மையையும், தேசப்பற்று பற்றி பேசிக் கொண்டு தமிழின அழிப்புக்கு தோள்கொடுத்து நிற்கும் காங்கிரஸ் கட்சி சகோதரர்களுக்கு ஒரு கேள்வி.

இலங்கை அரசால் அல்லது சிங்கள காடையர்களாள் ஒரு இந்தியன் கூட இதுவரை தாக்கப்பட்டது கிடையாதா ? இதுவரை 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டிருந்தாலும் அவர்களை பற்றியது அல்ல என் கேள்வி. நீங்கள்தான் தமிழரை இந்தியனாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்களே! நான் கேட்பது தமிழர் அல்லாத இந்தியர் யாரும் இதுவரை சிங்களத்தானால் தாக்கப்பட்டதோ அல்லது கொல்லப்பட்டதோ கிடையாதா? என்பதுதான் என் கேள்வி.

என்னைப் பொறுத்தவரை உங்களது பதில் இல்லை என்பதாகவே இருக்கும். ஏன் என்றால் உங்களுத்தான் உங்களது தலைவனின் மரணத்தை தவிர வேறு எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளும் சக்தியில்லையே. அதனால் உங்களுக்கு ஞாபகம் ஊட்டுவையில் 1983 கருப்பு ஜீலையில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே சொல்கிறேன்.


1983 ஆம் ஆண்டு ஜீலை 26 ஆம் நாள் மாலையில் இந்திய ஹை கமிஸ்ஷனில் (Indian High Commission), பாஸ்போர்ட் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த மோகன் சந்திரன் வீட்டில் இல்லாத பொழுது அவரது வீடுதாக்கப்பட்டது. வீட்டின் கண்ணாடி சன்னல்களையும் கதவுகளையும் உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த சிங்கள இன வெறி கும்பல் அவரது மனைவி, ஐந்து வயது மற்றும் ஐந்து மாத குழந்தைகள் கொலை அச்சுருத்தி வீட்டை விட்டு விரட்டி அடித்துவிட்டு அவர்களது முழு உடைமைகளையும் சூரையாடியது. மோகன் சந்திரன் குடும்பம் உயிரை பிடித்துக் கொண்டு இந்தியா ஓடி வந்த கதை ஞாபகம் இருக்கிறதா உமக்கு ஞாபகம் இருக்காது!

மோகன் சந்திரன் மட்டும் இன்றி மேலும் பல இந்தியர்கள் சிங்களத்தானி்ன் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளர்கள். தூதரக பணியாற்றிய மோகன் சந்திரன்னே தப்ப முடியாத பொழுது சதாரண இந்தியனின் நிலை என்னவாகியிருக்கும்.

ஆதாரம்:- Island of Blood by Anita Pratap (pages 54 to 56)

No comments: