Tuesday, December 30, 2008

தமிழருக்கு கா‌ங்‌கிர‌ஸ் இழைக்கும் துரோகம்



பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சை ‘அதிகபட்சமானது’, ‘தேவையற்றது’ என்று கூறியுள்ள இந்தியா, ஏராளமான மக்கள் கொல்லப்பட்ட அத்தாக்குதலை கண்டித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் தென் பகுதி மீது ஹமாஸ் போராளிகள் (இஸ்ரேலைப் பொருத்தவரை பயங்கரவாதிகள்) நடத்திய ராக்கெட் தாக்குதலில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை முதல் காசா பகுதி மீது இஸ்ரேலிய விமானங்கள் சரமாரியாக பறந்து குண்டு வீசி வருகின்றன. இதில் 300க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்துதான் திங்கட்கிழமை மாலை நமது அயலுறவு அமைச்சகம் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “காசா பகுதியில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திவரும் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும் என்று இந்திய அரசு எதிர்பார்க்கிறது. இத்தாக்குதலில் அளவிற்கு அதிகமான இராணுவ பலம் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளது மட்டுமின்றி, வன்முறையும் பெருகிவருவது ஏமாற்றமளிக்கிறது. இப்படிப்பட்ட தேவைக்கும் அதிகமான படைப்பலம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது தேவையற்றது, கண்டனத்திற்குரியது. காசா பகுதி மீது நடத்தப்பட்டுவரும் இஸ்ரேலின் தாக்குதல், வன்முறையை தொடரவே வழிவகுக்கும் என்பது மட்டுமின்றி, அமைதி முயற்சிகளை தடம்புரளச் செய்துவிடும் என்பதால் அதிகபட்ச கட்டுப்பாட்டை (இஸ்ரேல்) கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக்கொள்கிறது” என்று கூற‌ப்பட்டுள்ளது.



பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை இந்திய அரசு கண்டித்திருப்பது நியாயமானது, அதனை இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். பாலஸ்தீனப் பிரச்சனையிலும், அது தொடர்பாக நமது நாடு கொண்டுள்ள நிலைப்பாட்டையும் அறிந்த எவருக்கும் அந்த அறிக்கையின் ஒவ்வொரு வாக்கியத்திலும் முரண்பாடு ஏற்படுவதற்கு இடமில்லை.

காசா பகுதியில் இருந்த இஸ்ரேலின் தென் பகுதி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்காக, அங்குள்ள ‘பயங்கரவாதி’களின் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு இஸ்ரேல் நடத்திவரும் கொலை வெறித் தாக்குதலை நியாயம் என்று (இன்றுள்ள) அமெரிக்க அரசைத் தவிர வேறு எந்த நாட்டு அரசும் ஏற்காது. அத்தாக்குதலில் 300க்கும் அதிகமான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதையடுத்து இந்தக் கண்டன அறிக்கையை இந்தியாவின் அயலுறவு அமைச்சகம் விடுத்துள்ளது.

நமது கேள்வியெல்லாம், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் இதேபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத்தானே இன்றும் இலங்கையில் தமிழர்கள் மீதும் சிறிலங்க விமானப் படை நடத்திவருகிறது? சிறிலங்க விமானப் படை தாக்குதல் நடத்திய பிறகு அந்நாட்டு இராணுவம் எறிகணைகளை வீசியும், பல்குழல் பிரங்கிகளைச் சுட்டும் தாக்குகிறது. இது நீண்ட காலமாக நடந்து வருகிறதே? அதைக் கண்டித்து இந்திய அயலுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை கூட இதுவரை அளிக்காதது ஏன்?



கடந்த 25 ஆண்டுகளாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஈழத்தில் இப்படிப்பட்ட தாக்குதல் நடந்துவருகிறதே. இடையில் 2002 முதல் 2005 ஆம் ஆண்டுவரை போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலம் தவிர, சிறிலங்க விமானப் படை விமானங்கள் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டுதானே இருக்கி‌ன்றன? 2005ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக ராஜபக்ச பதவியேற்றதற்குப் பிறகு திட்டமிட்டு துவக்கப்பட்டத் தாக்குதல் இந்த ஆண்டில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்டு வருகிறது.


இந்த நிலையில்தான், கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்கு ‘போரை நிறுத்துங்கள்’ என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதம் இருந்து தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்துமாறு சிறிலங்க அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.



அதன்பிறகு, அக்டோபர் 14ஆம் தேதி (இடையில் அக்.06ஆம் தேதி ஆளும் தி.மு.க. கட்சி சார்பாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பியது, அதனை மயிலை மாங்கொல்லை கூட்டத்தில் விளக்கி முதலமைச்சர் கருணாநிதி பேசினார்) தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தமிழர்கள் மீது சிறிலங்க இராணுவம் நடத்திவரும் தாக்குதலை நிறுத்துமாறு சிறிலங்க அரசை வலியுறுத்த வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைவராக உள்ள சோனியா காந்திக்கும் அனுப்பப்பட்டது.

அதனைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், சிறிலங்க அரசுடன் பேசுவோம் என்றுதான் கூறினாரே தவிர, சிறிலங்க அரசிடம் பேசி தாக்குதலை நிறுத்துமாறு கூறுவோம் என்ற எந்த உறுதிமொழியையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. தமிழர்கள் மீதான தாக்குதலும் நிறுத்தப்படவில்லை.

அதன்பிறகு, டெல்லி வந்த சிறிலங்க அதிபரின் ஆலோசகரான ஃபசில் ராஜபக்சவிடமும் மத்திய அரசு பேசியதற்குப் பின்னரும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை. மாறாக, மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களால் கதிகலங்கி நிறுத்தியிருந்த விமானப்படைத் தாக்குதலை சிறிலங்கா மீண்டும் துவக்கியது. அப்படியென்றால் அர்த்தமென்ன? தாக்குதலை நிறுத்து என்று சிறிலங்காவிடம் மத்திய அரசு வலியுறுத்தவில்லை என்பதுதானே?

PTI
இதனை எந்த விதத்திலும் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுக்கவில்லை. “போர் நிறுத்தம் செய்யுமாறு அண்டை நாட்டை நாம் வலியுறுத்த முடியாது, அது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக ஆகிவிடும
்” என்று தமிழக முதல்வரிடம் (செய்தியாளர்களிடமும்தான்) மிக டெக்னிகலாக பேசிவிட்டு மத்திய அரசிற்கு ஆதரவு தொடரும் என்ற உறுதிமொழியை பெற்றுக்கொண்டு பறந்தார்.

தமிழக முதல்வரும், பிரணாப் குழப்பியதை பெரிதாக எடுத்துக்கொண்டு, தன் பங்கிற்கு ஒரு விளக்கம் அளித்தார். ஆனால், அங்கு ஈழத்திலோ தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

தமிழக முதலமைச்சர் தலைமையில் டெல்லிக்கு சென்று பிரதமரைச் சந்தித்து தமிழர்கள் மீதான போர் நிறுத்தப்பட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியபோது கூட, நமது தலைவர்கள் பேசியதையெல்லாம் ஒரு சிலையைப் போல அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தாராம் நமது பிரதமர். தமிழக முதல்வர் குறுக்கிட்டு, அயலுறவு அமைச்சரை சிறிலங்காவிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டதை மட்டும் ஒப்புக்கொண்டு பதில் பேசியுள்ளார். ஆனால் இதுவரை பிரணாப் சிறிலங்கா செல்வது உறுதி செய்யப்படவில்லை.


FILE
அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறிலங்க சென்று அதிபர் ராஜபக்சாவை சந்தித்துப் பேசினால் அடுத்த நிமிடம் சிறிலங்க இராணுவம் தாக்குதலை நிறுத்துவிடாது என்பது இங்கேயும் தெரியும், அங்கேயும் தெரியும். ஏனென்றால் தமிழர் பிரச்சனையில் நமது மத்திய அரசிற்கும், சிறிலங்க அரசிற்கும் ஒரு ‘நல்ல புரிந்துணர்வ’ உள்ளது விவரம் தெரிந்த தமிழர்களுக்குப் புரியாததல்ல.




அதனால்தான், இன்று வரை சிறிலங்க அரசை, அதன் தமிழர் ஒழிப்புக் கொள்கையை, தமிழர்களுக்கு எதிராக அது நடத்திவரும் இராணுவ ரிதியிலான இன ஒடுக்கலை எதிர்க்கவில்லை. எதிர்த்து ஒரு அறிக்கை கூட விடுக்கவில்லை.


FILE
காசாவில் உள்ள ‘இலக்குகளை’ குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் அங்கேயுள்ள அப்பாவி மக்களை கொல்கிறது என்பதை உணர்ந்து அறிக்கை அளிக்கும் அயலுறவு அமைச்சகத்திற்கு, அதேபோல விடுதலைப் புலிகளின் ‘இலக்குகள’க் குறிவைத்து அந்நாட்டு விமானப்படை நடத்தும் தாக்குதலில் எத்தனை ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியாதா என்ன? தெரியும். பிறகு ஏன் கண்டிக்கவில்லை? காரணம், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி கொண்டுள்ள ‘பார்வை’. அதுதான் நமது அயலுறவு அமைச்சகத்தை வழிநடத்துகிறது.

எங்கெல்லாம் மனித உரிமை மீறப்படுகிறதோ அதனையெல்லாம் எதிர்த்துக் கண்டிக்கும் ஒரு ஜனநாயக அரசாகத்தான் இந்தியா இருந்துவருகிறது. அப்படிபட்ட கொள்கையை ஒட்டியே நமது அயலுறவு அமைச்சகத்தின் செயற்பாடும் இருந்து வருகிறது. ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மட்டும், அது காங்கிரஸ் கட்சியின் தற்குறித்தனமான பார்வையால் வழிநடத்தப்படுகிறது.

அதனால்தான், “இந்த ஒரு ஆண்டில் மட்டும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் மீது 700 முறை விமானத் தாக்குதல் நடத்தியுள்ளோம். அந்தத் தாக்குதல்களில் சில சமயங்களில் 500 கி.கி. எடையுள்ள குண்டுகள் பல வீசப்பட்டுள்ளன” என்று அந்நாட்டு இராணுவ பேச்சாளர்

FILE
உதய நாணயக்காரா பேசியதற்குப் பின்னரும், மத்திய அரசு அதனைக் கண்டிக்கவில்லை. அது தமிழர்களை விட சிங்களவர்களையும், சிங்கள அரசையுமே நட்பாகக் கருதுகிறது. அந்தத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது என்று எத்தனை முறை தமிழ்நாட்டின் தலைவர்கள் வலியுறுத்தினாலும், அது காங்கிரஸ் கட்சிக்கு விளையாட்டாகவே தெரிகிறது.


2004ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தனர். தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும், புதுவை மக்களவைத் தொகுதியிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியே வெற்றி பெற்றது. அந்த 40 மக்களவை உறுப்பினர்களின் பலத்தால் மத்தியில் ஒரு கூட்டணி அரசை ஏற்படுத்தும்போது, தி.மு.க. தலைவர் கருணாநிதி தங்கியிருந்த இடத்திற்கே வந்த அவரைச் சந்தித்துப்பேசி சிக்கலின்றி ஆட்சியமைக்க வழிகேட்டவர், இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்காக, தமிழ்நாட்டின் தலைவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து விடுக்கும் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் வேடிக்கைப் பார்ப்பது அப்பட்டமான துரோகமல்லவா? தமிழக மக்களுக்கு இதெல்லாம் புரியாதா?

அங்கே பாலஸ்தீனர்களை இஸ்ரேல் குண்டு வீசி அழிக்கிறது. அதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. இங்கு ஈழத் தமிழர்கள் மீது குண்டு வீசி கொன்றொழிக்கிறது சிங்கள அரசு. அதற்கு மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆதரவளிக்கிறது. உதவுகிறது. இதனை தமிழர்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளார்கள்.


FILE
அரசியல் சித்து வேலைகள் மக்களுக்குப் புரியாது என்று காங்கிரஸ் கட்சி நினைத்துக் கொண்டிருக்கிறது. அது உண்மையல்ல. தமிழக மக்கள் சிந்திக்கக் கூடியவர்கள். 2004ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் அரசு ஏற்பட அனைத்துத் தொகுதிகளிலும் தமிழக மக்கள் ஏகோபித்த ஆதரவளித்தார்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தமிழினத்திற்கு துரோகம் இழைத்துவரும் காங்கிரஸ் கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள்.

Friday, December 26, 2008

அக்கா, தங்கையோடு பிறந்த காங்கிரஸ்காரன் இதை பார்கட்டும்

எச்சரிக்கை;- 18 வயதுக்கு இளையவர்களும், இளகிய நெஞ்சம் படைத்தவரும் இதனை பார்க்க வேண்டாம்.



மட்டுறுத்தப்பட்ட வகையில் வசனங்கள் மொழி பெயர்பு பதிவர் 'வெண்காட்டான்'
====================
வெண்காட்டான் said... இயலுமானவை ஓரளவிற்கு மொழி பெயர்ந்துள்ளேன்.
கீழ் ஆடையை மட்டும் கழற்றியுள்ளார்கள். காடையர்கள். எதுவும் எழுத முடியவில்லை. எவ்வளவோ சொல்ல முடியும். ஆனால்....

இராணுவம் 1: அம்மா (தகாத சொல்),(தகாத சொல்) புலி
இராணுவம் 2: இங்கவாடா
இராணுவம் 1: சரி சரி எங்க? முகத்த காட்டு
இராணுவம் 1: எங்க ஜகத், சடலத்தை பிடி, பொறு
இராணுவம் 3: பியல், பியல் தொப்பியை துக்கு (பியல் தொப்பியை தூக்கி சிரிக்கிறான்)
இராணுவம் 4: இவற்றை சரியா பதிவு செய், இந்த இடத்திற்குவா
(துரத்தில் துப்பாக்கி சத்தம்)
இராணுவம் 3 (அ) 4 : வேணாமடா (மிக அருகில் துப்பாக்கி சத்தம்)
(சாவடைநத்த போராளியை சுடுவதாக எண்ணுகிறேன்.)
இராணுவம் 1: டேய் பெடியா
இராணுவம் 2: என்ன
இராணுவம் 5 (அ) 7: எல்லாம் பெண்கள்
இராணுவம் 6: வடிவாக (அழகான).
இராணுவம் 3: அழகாக எடு
இராணுவம் 8: இதை கழற்றுவது எப்படி? (இன்னொரு கமாரவாக இருக்கலாம்)
இராணுவம் 1: இது எப்பவும் வீடியோவில் வரும் பெண்!
இராணுவம் 2: (அ) 4: இது எப்பவும் படத்தில வர்றது!

==================================

இனி பதிவு!

காங்கிரஸ்காரர்களே இதனைப் பாருங்கள், இறந்த பின்பும் இந்த பெண்பிள்ளைகள் (புலிகளாய் இருந்தாலும் இவர் பெண்பிள்ளைகளே! எனது சகோதரிகளே!) படும்பாட்டை. இரக்கம் இருந்தால் ஒருசொட்டு கண்ணீர் விடுங்கள், கோபம் வந்தால் கதறுங்கள், இல்லை காமம்தான் வந்தது என்றால் அது உங்கள்பாடு.

ஆனால் ஒரேஒரு வேண்டுகொள், இந்த ஒளிச்சித்திரத்தை மதிப்புக்குரிய அன்னை சோனியாவிடவும், அவரது மகள் பிரியங்காவிடமும் காண்பியுங்கள், முயன்றால் அந்த சிங்கள வசனத்தை நாகரீகத்துடன் மொழிபெயர்த்து அவர்களிடம் சொல்லுங்கள். பின் அவர்கள் இருவரது சொல்படி நடந்து கொள்ளுங்கள். செய்வீரா..?

இந்த ஆவணத்தை கண்டவுடன் எனக்கு அழகை வந்தது அழவில்லை. கோபம் வந்தது கொதிக்கவில்லை.

ஆனால் எனது மற்றும் எனது குடும்பத்தினரது ஒட்டுமெத்த கோபம் ஓட்டுச்சாவடியில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் போது கொட்டுவோம் அது காங்கிரஸ் கட்சிக்கு வழித்தாலும் வழிக்கும்.

நன்றி;- http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008


===============
குறிப்பு 1;- இந்த ஆவணத்தை வைத்து போராளிகள் மீது குற்றம் சுமத்துவது என்பது 'அரண்டவனுக்கு இருண்டது எல்லாம் பயம்' என்பது போல் போராளிகளின் மீது குற்றம் சுமத்துபவர்கள் சுமத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.

போராளிகளின் நன்னடத்தை பற்றி அறியாதவர்கள் கீழேயுள்ள சுட்டிக்கு சென்று, அவர்களின் நன்னடத்தையை பற்றி பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப்பின் எழுத்தின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

http://ivanpakkam.blogspot.com/2008_03_01_archive.html

http://ivanpakkam.blogspot.com/2008_06_01_archive.html


குறிப்பு 2;-இந்த ஆவணத்தை பார்த்த பின்பு கோபமோ, ஆத்திரம்மோ கொண்டால் வருந்தி அழவேண்டாம்! உங்கள் கோபத்தை, ஆத்திரத்தை தேக்கி வையுங்கள்.

1.ஈழத்தமிழர் ஆதரவு போராட்டம் நடக்கும் பொழுது உங்கள் கோபத்தை சிங்கள அரசுக்கு எதிரான கோசங்களில் காட்டுங்கள்.

2. புலம் பெயர்ந்து வாழ்பவராக இருந்தால் உங்கள் உள்ளூர் அரசில் தலைவரை சந்தித்து இந்த கொடுமையை பற்றி சொல்லி தடுக்க வகை செய்யுங்கள்.

3.இந்தியாவில் வசிப்பவராக இருந்தால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை உறுதி செய்யுங்கள். ஈழத்தமிழர் ஆதரவா கூட்டம் நடக்கும் இடங்களுக்கு சென்று தலையையாவது காட்டிவிட்டு வாருங்கள், அல்லது ஒரு தெருமுனை கூட்டத்தை கூட்டுங்கள்.

வருந்தி அழாதீர்! கோபத்தை தேக்கிவைத்து சனநாயக வழியில் காண்கியுங்கள். தனி ஈழம் அமைய வழி செய்யுங்கள். இதுவே வீரகாவியமான நமது சகோதிரி/மகள்களுக்கு செய்யும் மரியாதை.

Wednesday, December 24, 2008

புலிகளிடம் இருந்து நாங்கள் வாங்கியவை...

தமிழீழத்திற்கு எப்பொழு எல்லாம் ஆதரவு குரல் எழுகின்றதோ, அப்பொழுது எல்லாம் மக்கள் போராட்டம் என்றால் கிழோ என்ன விலை எனக் கேட்கும் காங்கிரஸ்காரர்கள் பாடும் பல்லவியில் ஒன்றுதான்..

'நெடுமாறன், வைகோ மற்றும் திருமாவளவன் முதலியோர் விடுதலை புலிகளிடம் இருந்து பணம் பெற்றுவிட்டு தமிழீழ ஆதரவு குரல் எழுப்புகின்றனர்' என்பது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, அன்மையின் திருமாவளவன் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.


'புலிகளிடம் நாங்கள் நிறைய வாங்கி இருப்பது உண்மைதான். 'எதற்கும் அஞ்சாதநெஞ்சுறுதி... குலையாத கொள்கை வெறி... இனத்தைக் காக்க இன்னுயிரையும் ஈயத்தயங்காத தைரியம்...' இப்படி புலிகளிடமிருந்து நிறைய வாங்கி இருக்கிறோம்'.


கேள்வி;- ''புலிகளால் கிடைக்கும் ஆதாயங்களுக்காகத்தான் நீங்கள் ஈழ விவகாரத்தில்இவ்வளவு அக்கறை காட்டுவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு பற்றி...''

பதில்;- ''புலிகளுக்கு யானைப்பசி. எத்தனை கோடிகள் அவர்களுக்குக் கிடைத்தாலும்,அவர்களின் தேவையைத் தீர்க்க முடியாது. அவர்கள் நடத்தும் யுத்தம்...அவர்கள் நடத்தும் அரசாங்கம்... புதிய நாட்டை உருவாக்க அவர்கள்மேற்கொள்ளும் முயற்சி... இதற்கெல்லாம் எத்தனையோ கோடிகள் தேவைப்படும்.புலிகளிடம் நாங்கள் நிறைய வாங்கி இருப்பது உண்மைதான். 'எதற்கும் அஞ்சாதநெஞ்சுறுதி... குலையாத கொள்கை வெறி... இனத்தைக் காக்க இன்னுயிரையும் ஈயத்தயங்காத தைரியம்...' இப்படி புலிகளிடமிருந்து நிறைய வாங்கி இருக்கிறோம்.அவர்களுக்கு துளியளவு உதவிகளைக்கூட எங்களால் செய்ய முடியவில்லையேஎன்பதுதான் எங்களின் மகா வேதனை. புலிகளிடம் கையேந்தி கட்சியை வளர்க்கும்நிலை எங்களுக்குக் கிடையாது. யதார்த்தத்தில் யாருக்கும் உதவுகிற நிலையில்புலிகளும் இல்லை. ஆதாயப் புகார்களைக் கிளப்புபவர்களைப் பார்த்து நான்ஆத்திரப்படவில்லை... அனுதாபப்படுகிறேன்.''

நன்றி;- ஜூனியர் விகடன், 28-12-08 -ம் நாள் பதிப்பு.

Sunday, December 21, 2008

இணைந்து ஒலிக்கும் எதிர்ப்புக் குரல்

இலங்கையில் சிறிலங்க இராணுவத்தின் தொடர் தாக்குதலால் பெரும் அவலத்திற்கு உள்ளாகிவரும் ஈழத் தமிழர்களைக் காக்க தமிழ்நாட்டில் இருந்து எழும் ‘போரை நிறுத்து’ என்று ஒலிக்கும் குரல், தனி ஈழ தனி அரசு அமைவதற்கான ஆதரவுக் குரலே என்று மார்க்கசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

தமிழரிடையே நீண்ட காலமாக மதித்துப் போற்றப்படும் ஒரு தமிழ் நாளிதழில் வெளியாகியுள்ள அந்தக் கட்டுரை, ஈழத் தமிழர்களின் தொடர்ந்து அனுபவித்து வரும் இன்னல்களையோ, அதற்குக் காரணமான சிறிலங்க பேரினவாத அரசின் இராணுவ நடவடிக்கையையோ அல்லது சிங்கள அரசு தமிழர்கள் மீது திட்டமிட்டு தொடுத்துவரும் இன ஒடுக்கலையோ பேசவில்லை. மாறாக, தமிழ்நாட்டின் அரசியலையும், ஈழ மக்களின் விடுதலையை முன்னெடுத்துப் போராடிவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சிறுமைபடுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தி எழுதப்பட்டுள்ளது.

இப்படி ஒரு கட்டுரை வேறு எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைமையின் குரலாக இருந்தாலு‌ம் அதற்கு எவ்வித மதிப்பும் அளிக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. ஆனால் ஒரு மார்க்சியவாதி, அதுவும் இந்திய அளவில் உள்ள ஒரு கட்சியின் தமிழகக் கிளையின் மூத்த தலைவர்களில் ஒருவர் கூறுகிறார் என்கின்றபோது, அதில் வாசகர்களுக்கு ஒரு அடிப்படை எதிர்பார்ப்பு இருக்கும். ஏனெனில் மார்க்சியவாதிகள் ஒரு பிரச்சனையை அலசும் போது அதில் மனிதாபிமானம் மட்டுமின்றி, யதார்தத்தின் பிரதிபலிப்பும், பிரச்சனையின் மீதான தெளிவான பார்வையும், அதற்கான தீர்வும் இருக்கும்.

ஆனால் இந்தக் கட்டுரையில் அப்படி எதுவும் இடம்பெறாதது மட்டுமின்றி, அதில் யதார்த்தை தங்கள் (அரசியல்) வசதிக்காக மறைக்கும் போக்குதான் துவக்கம் முதல் முடிவு வரை நிறைந்திருந்தது.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசு அக்டோபர் 14ஆம் தேதி கூட்டிய கூட்டத்தில் கலந்துகொண்டு, அந்தத் தீர்மானம் நிறைவேற சம்மதம் அளித்தது மார்க்ஸிஸ்ட் கட்சி. ஆனால் அப்படிப்பட்ட போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டால் அது விடுதலைப் புலிகளுக்கே சாதமானதாக இருக்கும் என்ற வாதத்தை முன்வைத்து அதற்கு வலிமை சேர்க்க முற்பட்டு, அதற்காக ஈழத் தமிழர்களின் இரண்டு ‘மாபெரும் தலைவர்கள்’ கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்வது புலிகளுக்குத்தான் வலிமை சேர்க்கும், ஏனென்றால் அவர்கள் போர் நிறுத்தத்தை பயன்படுத்திக் கொண்டு தங்கள் பலப்படுத்திக் கொள்வார்கள் என்று உணர்ந்துள்ள மார்க்ஸிஸ்ட் கட்சி, அந்தத் தீர்மானத்தை எதிர்த்திருக்கலாமே? எதற்கு மற்ற கட்சிகளோடு இணைந்து ‘ஒருமனதாக’ நிறைவேற ஒத்துழைத்தது? என்ற கேள்வி எழுகிறது.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டால் விடுதலைப் புலிகள் தங்களை பலப்படுத்திக் கொள்வார்கள் என்பதே உண்மையானால், சிறிலங்க அரசும் அதைச் செய்யாதா? அவ்வாறு செய்வதற்கு அதற்கு ஏதேனும் தடை உள்ளதா? தங்களை நன்கு பலப்படுத்திக் கொண்ட பின்னரல்லவா தமிழர்கள் மீது இத்தனை பெரிய தாக்குதலை தொடர்‌ந்தார்போல் நடத்தி வருகிறது சிறிலங்க அரசு?என்றும் ஒரு கேள்வி எழுகிறது.

ஈழ மக்கள் விடுதலை போராட்டத்தில் நியாயம் உள்ளதா இல்லையா?

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் எழுந்த இந்த ஆதரவுக் குரலை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எவ்வாறு மதிப்பீடு செய்கிறார் என்று கேள்வி கேட்டு, மாவீரர் தினத்தன்று அவரது உரையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை சுட்டிக்காட்டியுள்ள கட்டுரையாளர், “இதே நேரம் எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்ற அவருடைய வேண்டுகோளை அடியொற்றி, அவர்களின் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை இங்கு எழும்பும் என்று கூறியுள்ளார்.

தமிழீழ தனியரசிற்கு ஆதரவாக இங்கு குரல் எழுவது, ஆதரவு பெருகுவது எல்லாம் இருக்கட்டும். ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நிலையென்ன? அதனை விளக்க வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சனைக்கு பிரிவினையல்ல, அரசியல் தீர்வுதான் சரி என்று அக்கட்சியின் மாநில செயலர் வரதராஜன் கூட சமீபத்தில் அறிக்கை விடுத்திருந்தார். அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சீத்தாராம் யச்சூரியும் அரசியல் தீர்வையே வலியுறுத்தி இருந்தார்.

அப்படியானால், அங்கு நடைபெறும் விடுதலைப் போராட்டம் நியாயமற்றது என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறதா? ஆம் என்றால் எப்படி? தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமைகளுக்காக துவக்கத்தில் சாத்வீக வழியில் தானே போராடினார்கள், அது எந்தப் பலனும் அளிக்காத நிலையில்தானே ஆயுதப் போராட்டத்திற்கு வந்தார்கள். அப்படிப்பட்ட போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கிறதா? அது தவறு என்று கூறட்டும். சிறிலங்க அதிபர் ராஜபக்சே தமிழர் பிரச்சனைக்கு நீடித்த தீர்வு காணும் நியாய உணர்வு படைத்தவர் என்று சொல்லட்டும். அவர் மேற்கொள்வது ஒரு இனவாத நடவடிக்கை இல்லை என்று கூறட்டுமே.

எல்லா அடிப்படை உரிமையும் பறிக்கப்பட்ட ஒரு இனம் தனது விடுதலையை நாடுவதில் என்ன தவறு உள்ளது. அவர்களை அரசியல் தீர்விற்கு கட்டுப்படு என்று சொல்வதற்கு நாம் யார்?

உண்மையை மறைப்பது ஏன்?

“ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் ஏற்பட்டதற்குப் பின்னர் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டு ஆயுதங்களை ஒப்படைத்த பிரபாகரன் அடுத்த மாதமே தனது நிலையை மாற்றிக்கொண்டு, இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக ஆயுத மோதலை தொடங்கினார்” என்று குறிப்பிடுகிறார். இடையில் நடந்த உறுதி மீறல்களை இந்திய இராணுவத்தின் தளபதியாக அப்பொழுது செயல்பட்ட மேஜர் ஜெனரல் ஹர்கிராத் சிங் ஒரு புத்தகமாகவே வெளியிட்டுள்ளாரே. யார் செய்தது தவறு? என்று அலசியிருக்க வேண்டாமா? ஒரு பிரச்சனையை பொதுவில் அலசும் போது உண்மையை வசதியாக மறைத்துவிட்டு வசைபாடுவது நேர்மையாகுமா?

தமிழ்நாட்டுத் தமிழர்களின் கோரிக்கைக்கு இணங்க இலங்கைத் தமிழர்களைக் காக்க சென்ற இந்திய அமைதிப் படை, நமது தளபதிகளின் கட்டுப்பாட்டிலோ அல்லது பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலோ செயல்படாமல், தமிழர்களை இனப் படுகொலை செய்வதில் முழுமூச்சாய் நின்ற சிறிலங்க அதிபர் ஜெயவர்த்தனேயின் அதிகாரத்திற்கு உட்பட்டு அல்லவா செயல்பட அனுமதிக்கப்பட்டது. இந்த உண்மையை மறைப்பது ஏன்? அதன் காரணமாகத்தானே, புலிகளின் தளபதிகளை சிறிலங்க இராணுவத்திடம் ஒப்படைக்கும் பிரச்சனை ஏற்பட்டு, அதன் காரணமாக அவர்கள் சயனைட் விழுங்கி தற்கொலை செய்துகொள்ள, அதுவே இந்திய அமைதிப் படையுடன் விடுதலைப் புலிகள் மோதுவதற்கு வித்திட்டது? விவரமறிந்த ஒரு மார்க்சியவாதி ஊரறிந்த இந்த உண்மையை மறைக்கலாமா?

ஈழ விடுதலைப் போராட்டத்தை சிறுமைபடுத்த சிங்கள இனவாத அரசு தனது பிரச்சார பீரங்கிகளை முடுக்கிவிட்டு என்னென்ன சொன்னதோ, சொல்லி வருகிறதோ அதையெல்லாம் கட்டுரையில் வழங்கி சிறப்பித்திருக்கும் அந்த மார்க்சியவாதி, ராஜபக்ச அரசும் அதன் இராணுவமும், விமானப்படையும் மேற்கொண்டுவரும் இன அழிப்பு நடவடிக்களைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. சுத்தமான பெளத்த அரசு அங்கு நடைபெறுகிறது என்று நம்பவைக்க சொல்லாமல் விட்டுவிட்டார் போலும்.

தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டங்களை ஆதரித்து, உலகளாவிய மக்கள் சமூகத்தின் ஒற்றுமையை வலியுறுத்தும் மார்க்சிஸ்ட்டுகள், ஒரு பேரினவாத அரசின் 30 ஆண்டுக் காலத்திற்கும் மேற்பட்ட இன ஒழிப்பை, அடக்குமுறையை உறுதியாக கண்டிக்காமல், அந்த அரசின் அடியொற்றி அச்சு பிசகாமல் கட்டுரைகளைத் தீட்டிக்கொண்டிருப்பது மார்க்சியத்திற்கு ஏற்பட்ட சோதனையோ.

“தமிழ்நாட்டில் ஈழ மக்களுக்கு ஆதரவாக இன்று எழுப்பியுள்ள குரல், தனித்தமிழ் ஈழ ஆதரவுக் குரல், தமிழக மக்களின் மனித நேய உணர்வுகளை மடைதிருப்ப முயல்வதை அனுமதிக்க முடியாது” என்று கூறி முடித்துள்ளார்.

எதிர்ப்புக் குரலின் ஒரே ஒற்றுமை!


சொந்த மண்ணிலேயே வேட்டையாடப்பட்டு, வீடு, வாசலை இழந்து, குண்டு வீச்சில் சொந்த பந்தங்களைப் பறிகொடுத்துவிட்டு, கொட்டும் மழையில் காடுகளில் உறைவிடமின்றி, போதுமான உணவின்றி வாடிவரும் ஈழ மக்களுக்காக தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்புகிறார்கள். அவர்களின் துயரம் தீர போர் நிறுத்தம் மட்டுமே வழி என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதன் பிறகு இறுதித் தீர்வு என்பது அம்மக்களின் சுதந்திர முடிவிற்கு விடப்பட வேண்டும் என்று கருதுகிறார்கள். அந்தக் குரல் நாளையும் ஒலிக்கும். அது எப்படி ஒலிக்க வேண்டும் என்று அவர்களின் சிந்தனை நிர்ணயிக்கும், அதனை இட்டுக்கட்டிச் செய்யப்படும் பிரச்சாரத்தால் திசை மாற்றிவிட முடியாது.

தமிழக மக்களின் ஆதரவினால் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஏற்படும் நெருக்கடியைக் குறைக்க, இது புலிகளின் ஆதரவு குரல் என்றும், பிரபாகரனை காப்பாற்றுவதற்கான குரல் என்றும், தமிழர் பயங்கரவாதம் என்றும், இன வெறி என்றும் பல்வேறு குரல்கள் ஊடகங்களிலும், அரசியலிலும் ஒலிக்கின்றன. அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட்டுகள் உட்பட இவர்கள் அனைவரும் ஈழப் பிரச்சனையில் மட்டும் ஒரே குரலாய் ஒலிக்கின்றனர். இதனை தமிழகம் விழிப்புடன் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. அந்தக் குரல்களின் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் இடையில் ஒரே ஒரு ஒற்றுமை நன்கு இழையோடுவதையும் அது கவனிக்கத்தவறவில்லை.

நன்றி!

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0812/20/1081220067_1.htm

Friday, December 12, 2008

வல்லினம், மெல்லினம், இடையினம்

எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது இந்த வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் ?

தமிழ் இலக்கணத்தில் முதல் பாடத்திலே வருவது. உங்களால் சரியாக சொல்ல இயலுகின்றதா என ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்!

.
.
.
.
.
.
.

இல்லையேனில் இதோ!

வல்லினம்

மெய்யெழுத்துக்கள் பதினெட்டில், முயற்சியுடன் வலித்து ஒலிக்கப்படும் க், ச், ட், த், ப், ற் என்ற ஆறு எழுத்தும் வல்லினம் ஆகும். இவற்றை ஒலிக்கும்போது மூச்சுக காற்று மார்பிலிருந்து வலுவாக வருகிறது.

மெல்லினம்

அதிக முயற்சியின்றி மூக்கினால் மெலிந்த ஓசையுடன் ஒலிக்கப்டும் ங், ஞ், ண், ந், ப், ன் என்ற ஆறு எழுத்தும் மெல்லினம்

இடையினம்

மூக்கிற்கும் மார்புக்கும் இடையே மிடற்றினின்றும் ஒலிக்கப்படும் ய், ர், ல், வ், ழ், ள் என்ற ஆறு எழுத்தும் இடையினம்

Sunday, October 19, 2008

ஈழத்து கதறல்! - ஒளிசித்திரம்


முழு ஒளிசித்திரம் - 14 நிமிடங்கள்

தமிழக மக்களின் நெஞ்சங்களை உருக்கி கொண்டிரும் இந்த ஒளிசித்திரம் தங்களது பார்வைக்காக.





இதை பர்த்த பின்பும் தனி ஈழம் தேவையில்லை, போர் நிறுத்தமும் தேவையில்லை என கூறும் சகோதர, சகோதரிகள் பின்னுட்டம் மூலம் தம் கருத்துகளை செல்லுங்கள்!

Wednesday, October 15, 2008

பிரச்சனையை திசைதிருப்பும் நேர்மையற்ற பார்வை!

எப்போதெல்லாம் இலங்கைத் தமிழர்களின் மீது சிறிலங்க இராணுவம் தாக்குதல் நடத்தி, அதன் காரணமாக மிகப் பெரும் அளவிற்கு மனிதாபிமான, மனித உரிமை பிரச்சனை எழுகிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து அவர்களுக்கு ஆதரவாகவும், சிறிலங்க அரசின், அந்நாட்டு இராணுவத்தின் அத்துமீறல்களுக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் இருந்து குரல் எழுவது இயல்பான, இயற்கையான எதிர் வினையாகும்.

ஆனால், அவ்வாறு சிறிலங்க அரசின் அடக்குமுறையையும், சொந்த நாட்டு மக்கள் மீது அவர்கள் கடந்த 30 ஆண்டுக்காலமாக கட்டவிழ்த்துவிட்டுவரும் காட்டுமிராண்டித்தனமான இன அழிப்பிற்கு எதிர்ப்புக் குரல் எழும்போதெல்லாம், இங்கிருந்து சில அரசியல் ‘தலைவர்களும்’, சில பத்திரிக்கைகளும் அதனை பயங்கரவாதத்திற்கு ஆதரவான குரலாக சித்தரித்து எதிர்க்குரல் கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

அப்படிப்பட்ட குரல்கள் இப்பொழுதும் எழுந்துள்ளது தமிழர்கள் அனைவரையும் சிந்திக்கத் தூண்டியுள்ளது.இலங்கைத் தமிழர்கள் மீது சிறிலங்க அரசு நடத்திவரும் இன ஒடுக்கலுக்கு இந்தியா ஆயுதம் தந்து உதவுகிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ பேசினார். உடனே தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக அவர் பேசுகிறார் என்றும், ம.தி.மு.க.வை தடை செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி கூக்குரலிட்டார்.

சிறிலங்க இராணுவத்தால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டும், அந்நாட்டு விமானப் படை தொடர்ந்து நடத்திவரும் குண்டு வீச்சால் வீடிழந்து தங்கள் மண்ணிலேயே இரண்டரை இலட்சம் பேர் அகதிகளாக சாலையோரங்களிலும், மரத்தடிகளிலும் தஞ்சமடைந்துள்ள அவல நிலையை அறிந்து, அவர்களைக் காப்பாற்ற தமிழ்நாட்டில் இருந்து அபயக்குரல் மீண்டும் எழும்பியுள்ளது. ஆனால் இதனை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குரல் என்கிறது நமது தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஒரு நூற்றாண்டுக் கால ‘பாரம்பரியமிக்க’ ஆங்கில நாளிதழ் ஒன்று.

ஒன்றேகால் இலட்சம் ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர், தங்கள் நாட்டிலேயே இரண்டரை இலட்சம் தமிழர்கள் அகதிகளாகி உணவு, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் ஏதும் கிட்டாமல் அல்லுறுகின்றனர். அவர்களுக்கு உதவிடும் நோக்கோடு செயல்பட்டுவந்த சர்வதேச தொண்டு நிறுவனங்கள் சிறிலங்க அரசால் வெளியேற்றப்பட்டுவிட்டன. இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல், தனது கருத்துப் பக்கத்தில் நீண்ட ‘தேசப்பற்று’ கட்டுரை தீட்டியுள்ளது அந்த நாளிதழ்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக எழுப்படும் குரல்கள் யாவும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குரல்களாம். இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அந்த ‘பயங்கரவாத’ இயக்கத்தின் தூண்டுதலால்தான் ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் சிறிலங்காவிற்கு எதிராக குரலெழுப்புகின்றனவாம். அந்த தமிழ் வெறித்தனக் கூச்சலிற்கு ஆட்பட்டு ஆளும் கட்சியான தி.மு.க.வும், எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க.வும் அதே குரலை (அதாவது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான) குரலை ஒலிக்கின்றனவாம். இப்படியெல்லாம் கூறிவிட்டு, அந்தக் கட்டுரையாளர், தனது மிதமிஞ்சிய தேசப்பற்றை ஒரு படி மேலே சென்று பறைசாற்றியுள்ளார்.

இதனைக் கண்டு மத்திய அரசு தனது நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாதாம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டுமாம். மிகுந்த விசனத்துடன் தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ்நாட்டின் கட்சிகளும் அமைப்புகளும் முன் வைத்த காரணங்களை மறுத்து ஏதாவது ஆதாரப்பூர்வமான தகவலைத் தந்திருந்தால் இந்தக் கட்டுக் கதையாளர் எழுதியதில் ஏதாவது உண்மை இருக்குமோ என்று கூட விவரமறியாதவர்கள் எண்ணிப் பார்த்திருப்பார்கள். அப்படி எதுவும் கூறாமல், ஒரே ஒரு காரணத்தை மட்டும் கூறியுள்ளார்.அவர் கூறிய காரணம் இதுதான்: விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் நடத்திவரும் சிறிலங்க இராணுவம், புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கியுள்ள இடத்தை நெருங்கிவிட்டது. அந்த ஆபத்தில் இருந்து தன்னை காத்துக்கொள்ள தமிழ்நாட்டிலுள்ள தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டுள்ளார் என்று எழுதியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும் தங்களைக் காத்துக் கொள்ளவது எப்படி என்று தெரிந்தவர்களா, தெரியாதவர்களா என்பது யாருக்குத் தெரியவில்லை என்றாலும், இதுநாள்வரை அவர்கள் கொடுத்துவந்த பதிலடியில் சிக்கி சின்னபின்னமான சிறிலங்க இராணுவத்திற்கு நன்றாகவே தெரியும். எனவே குரல் கொடுத்து காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பது கட்டாயம் விடுதலைப் புலிகள் இல்லையென்பது விவரமிறிந்த அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

ஆனால் இந்தக் கட்டுரையாளரின் நோக்கம் அங்குள்ள உண்மையைக் கூறுவது அல்ல, மாறாக, இன்று தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவு, சிறிலங்க அரசு மீது இந்திய அரசு அழுத்தம் தரக்கூடிய வகையில் இருக்கக் கூடாது என்பதை ‘ஒருவித மிரட்டல்’ மூலம் மிக ‘லாவகமாக’ எடுத்துரைத்துள்ளார். இது யாருடைய தூண்டுதலில் எழுதப்படுவது என்பதும் சிந்திக்கும் ஆற்றலுள்ள தமிழர்களுக்கு தெரியாதது அல்ல. அவர்களுக்குள்ள சிறிலங்கத் தொடர்புகள் அத்துணை ரகசியமானதுமல்ல.

இப்படிபட்ட அரசியல் சாணக்கியம் எல்லாம் இலங்கையில் தமிழர்கள் தங்களின் உரிமைப் போர் துவக்கியபோதே, இங்கு துவங்கிவிட்டதை தமிழர்கள் அறியாதவர்களல்லர். தமிழர் தலைவர் அமிர்தலிங்கத்திற்காக கண்ணீர் சிந்தும் கட்டுரையாளர் அவரும், அவர் சார்ந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனியும் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று முடிவு செய்து போராட்டத்தைத் துவக்கியபோது ஆதரித்தவர்களா? அல்லது தமிழர்கள் சம உரிமை பெறுவதற்கு எதிராக ஒவ்வொரு முறையும் இணைந்து செயலாற்றும் சிங்கள பேரினவாத அரசியல் கட்சிகளான ஜனதா விமுக்தி பெரமுணா, ஜாதிக ஹேல உருமயா போன்றவற்றை எப்பொழுதாவது கண்டித்தவர்களா? ஒருபோதும் இல்லை.

எப்போதெல்லாம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் குரல் எழுப்பப்படுகிறதோ அப்போதெல்லாம் இராஜீவ் காந்தி படுகொலையை நினைவூட்டி, அப்பிரச்சனையை திசை திருப்பி சிறிலங்க அரசின் இனப் படுகொலை திட்டத்திற்கு பலம் சேர்க்கும் தமிழர் எதிர்ப்பை பாரம்பரியமாகக் கொண்ட சக்திகளின் கரங்களே இப்படியெல்லாம் எழுதுகின்றன.

இல்லையென்றால், நேற்று இதே நாளிதழில் எழுதப்பட்ட தலையங்கம் ஒன்றில், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தங்கள் நாட்டிலேயே அராஜகத்தை கட்டவிழ்த்து மிகப்பெரிய படுகொலைகளை நடத்திவரும் அரசுகளுக்கு ஆயுதங்களை விற்பதில்லை என்பது தொடர்பாக ஐ.நா.வில் விவாதிக்கப்படவுள்ள தீர்மானம் குறித்து எழுதிய தலையங்கத்தில் கூட, கால் நூற்றாண்டிற்கும் மேலாக திட்டமிட்ட இன ஒழிப்பை மேற்கொண்டு, ஒரு இலட்சம் தமிழர்களை அழித்த சிறிலங்க அரசை அது குறிப்பிட்டிருக்குமே. ஏன் குறிப்பிடவில்லை?

சிறிலங்க அரசை மட்டுமல்ல, சீன அரசிற்கு எதிராக திபெத்திய மக்களின் எழுச்சியைக் கூட இந்த நாளிதழ் தொடர்ந்து கொச்சைபடுத்திதான் எழுதிவந்தது. சீன அரசிற்கு ஆதரவாகவே கட்டுரைகளை வெளியிட்டும் வந்தது. நமது நாட்டைச் சேர்ந்த வரலாற்றாளர்கள் பலர் சீன அரசு எப்படியெல்லாம் திபெத்தியர்களை ஒடுக்கியது என்பதை விவரித்து, அது தொடர்பான சில கேள்விகளையும் முன் வைத்தபோது அதற்கு எந்தப் பதிலும் கொடுக்க முடியாமல் தனது பொய்யாடலை நிறுத்திக்கொண்டது இந்த நாளிதழ்.

இலங்கைத் தமிழர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, அவர்கள் நிர்கதியற்று நிற்கும் இச்சூழலில் உண்மையை உலகிற்கு கூறி, சிறிலங்க அரசு மேற்கொண்டுவரும் இன ஒடுக்கலை தடுத்து நிறுத்த இந்திய அரசையும், மற்ற உலக நாடுகளையும் தட்டி எழுப்ப கட்டுரை எழுத வேண்டிய இந்த பாரம்பரிய நாளேடு, அவர்களை பூண்டோடு அழிக்கும் திட்டத்தை நிறைவேற்றிவரும் சிறிலங்க அரச பயங்கரவாதத்திற்கு வலிமை சேர்த்துக்கொண்டிருப்பது அதன் உள் நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

தமிழர்கள் சிந்திக்கத் திறானியற்றவர்கள் அல்லர். அவர்களை திசை திருப்ப முடியாது. இலங்கைத் தமிழர்களை இன்றல்ல, என்றைக்கும் தமிழ்நாட்டு தமிழர்கள் விட்டுத் தர மாட்டார்கள். ஏனெனில் அந்த உறவிற்கும் ஒரு பாரம்பரியம் உண்டு. அது உலகிற்கு வழிகாட்டியாய் திகழும் பண்பாட்டின் பிரதிபலிப்பு.

“இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் கிளர்ந்தெழுவதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” எனும் அதன் ஆவல் வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

ஊடகத்தின் தலையாய பண்பு அது உண்மையைச் சார்ந்து நிற்க வேண்டும். அதுதான் அதன் தர்மம். அதுவே மக்களின் தகவலறிதல் எனும் கருத்துரிமைக்கு ஒரு பத்திரிக்கை அளிக்கும் உண்மையான மதிப்பு. அதைத் தவிர்த்துவிட்டு, எருதின் புண் காக்கை அறியாது என்பதுபோல், தமிழரின் துயரை மறைத்து, அந்த இனத்தை பூண்டோடு அழிப்பதற்கு துணைபோவதும், அந்த ஈன நடவடிக்கையில் ஈடுபடும் அரசிடமிருந்து விருதையும், பட்டத்தையும் பெறுவதும் மாண்புடைய பத்திரிக்கை தர்மத்தை மானபங்கம் செய்வதாகும்.

நன்றி;- http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0810/14/1081014039_3.htm

Tuesday, October 14, 2008

கானலாய் இருந்துவந்த தனி ஈழம் பிறக்கட்டும்!




ஹிந்தி தினிப்பை எதிர்தவனே!
ஈழத்தை தருவிப்போனே!

தனி ஈழம் மலரட்டும்! தரணியேங்கும்
நிரந்தரமாய் நின்புகழ் நிலவட்டும்!

நின்னோடு - நெடுந்துயர் நீக்கவந்த நெடுமாறன் வாழட்டும்!
வாழும் மறவன்-னாம் வைகோ வாழட்டும்!

தம்இனம் காக்கவந்த தைலாபுரத்தார் வாழட்டும்!
நான் தமிழச்சி என்றுனர்த்திய ஜெயலலிதா - வாழட்டும்

விடுதலை சிறுத்தை திருமா வாழட்டும்!
கருப்புசட்டை வீரர் கி.வீ வாழட்டும்!

உண்னா நேன்பு கொண்ட சிவப்பு ராசாவும்
ஏனைய தமிழ்மகன்களும் வாழட்டும்!

கானலாய் இருந்துவந்த தனி ஈழம் பிறக்கட்டும்!
நிம்மோடு சேர்ந்து தனி ஈழமும் வாழட்டும்!

================

செய்தி;

இரு வார கெடுவுக்குள் நடவடிக்கை- இல்லையேல் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர்: இந்திய அரசுக்கு தமிழக அனைத்து கட்சிக்கூட்டம் எச்சரிக்கை

Tuesday, October 07, 2008

ஈழத்தமிழரின் பாதுகாவலன் விடுதலை புலிகளே - திணமணி

ஈழத்து பிரச்சனையில் சிங்கள அரசுசார்பு செய்திகளையே (அதிகம்) வெளியிடும் திணமணி செய்திதாள் தமிழர்களின் காவலர் விடுதலை புலிகளே என ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழேயுள்ள சுட்டிக்கு செல்லவும்

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20081007120141&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0&ndate=10/8/2008&dName=No+Title&Dist=

Sunday, June 08, 2008

வன்னிகாட்டுக்குள் புலிகளின் விருந்தோம்பலும் கண்ணியமும் - பகுதி ஆ

சென்ற பதிவின் தொடர்சி
======================

உடல் குளிருக்கு பழகியதும் எனது சுவாசம் சீராணது. என் உடல் முழுதும் சோப்பு போட்டுவிட்டு தண்ணீரை ஊற்றி கொள்ள எத்தனித்த போது வாளி இரண்டும் காலியாக இருப்பதை உணர்தேன். இப்பொழுது இரண்டு வழிகள்தான் உள்ளது, ஒன்று நானாக தண்ணீரை இறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது அந்த இளம் போரளிகளில் ஒருவரை நீரை இறைத்து தர சொல்ல வேண்டும். அப்படி ஒருவர் இறைத்து தரும் பட்சத்தில் நான் எங்கு மறைவது?

பிறகு நானே நீரை இறைத்துக் கொள்ள முடிவு செய்தேன். எனது சிறுவயதில் வாரப்பெட்டி (கேரளாவில்) பாட்டி வீட்டல் கிணற்றில் இருந்து நீர் இறைத்த அனுபவம் உள்ளது. கோடை விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு செல்லும் பொழுது, பணிப்பெண் மேரி கைதேர்ந்த வகையில் நீர் இறைப்பதற்கு கற்று தந்தாள். இப்பொழுது கிட்டதட்ட எனது கொள்ளு பாட்டியை போல் நீரை இறைத்துக் கொண்டுள்ளேன். நான் படித்து, வேலைக்கு சென்று, நகரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து, தனியாக குடும்பத்தை பேனி, சரளமாக ஆங்கிலம் பேசி, பல நாட்டு அதிபர்களுடண் பழகி, வெளி நாடுகள் சென்று வந்திருந்தாலும் சில விசயங்கள் எப்பொழுதும் மாறுவது இல்லை.

நான்கு முறை shampoo-வினால் கேசத்தை கழுவி, பிசுபிசுப்பு தன்மையற்று வைக்கோலை போல் உலர்வாக உணர்த்தும் நான் குளிப்பதை நிறுத்தினேன். உடலை துவட்டிக் கொண்டு, டால்கம் பவுடரை உடலில் தூவியபின் புதிய உடைக்கு மாறினேன். இப்பொழுது நான் யானை பசியில் இருப்பதை உணர்தேன்.

எனது பொருட்களை எடுத்துக் கொண்டு அவ்விரு போராளிகளுக்கு எனது நன்றியை தெரிவித்து விட்டு, அவர்களின் உறைவிடம் நோக்கி நகர்தேன். சுற்றும் முற்றும் பார்த்தவாறு தூய்மையான காற்றை ஆழ்ந்து சுவாசித்தேன். இரவு நேரத்து வானம் லட்சோபலட்ச நட்சத்திரங்களாள் ஓளியுட்டப்பட்டிருந்தது. மங்கிய நிலவு ஒளி ரம்மியமாக காட்சியளித்தது. என்னை சுற்றிலும் செடிகொடிகளும் மரங்களும் கோட்டோவியமாய் தெரிந்தது. ஒரு பதினைந்து அடி தொலைவில் உள்ள மரத்தில் வெள்ளை நிறத்தில் ஏதோ ஒன்று ஊசலாடிக் கொண்டிருந்தது.

என்னோடு சற்று தொலைவில் வந்து கொண்டிருந்த புலி போராளிடம் "என்ன அது?" என்று வினாவினேன்.

'இரவுச் சாப்பாடு' என பதில் வந்தது.

அவர்களது பதில் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது, மீண்டும் தொங்கி கொண்டிருந்த பொருளைப் பார்த்துவிட்டு 'சாப்பாடு என எதை சொல்கின்றீர்கள்' என வினாவினேன்.

'தோலுரிக்கப்பட்ட மயில்தான் அங்கு இருப்பது. அரிசி சோறும், மயில் கறியுமே இன்றைய இரவு சாப்பாடு'.

மீண்டும் ஒரு முறை உற்றுபார்துவிட்டு, மரத்தில் தொங்குவது மயில்தான் என உணர்தேன். மரத்தில் தொங்குவது இறகுகள் நீக்கப்பட்ட மயில்தான். சற்று முன்னே பிடிக்கப்பட்ட மயில் பொங்குகள் நீக்கி சுத்தம் செய்யவதற்கு ஏதுவாக தாழ்வான மரக்கிழையில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. மயிலின் நீண்ட கழுத்தும், புடைத்துக் கொண்டிருக்கும் வயிறும், எழும்பும் தோலூமாக இருக்கும் அதன் கால்கள் ஆகியவற்றை கொண்டு தொங்குவது மயில்தான் என்பதனை உணர்தேன்.

ஒரு மணிநேரத்தில் அந்த மயில் எங்களது தட்டுகளில் இருந்தது, மயில் கறி பழுப்பு நிறத்தில் உண்ன கடிணமாக இருந்தது. ஒரு துண்டை வாயில்லிட்டு நெடு நேரம் மென்று கொண்டிருந்தேன். மெல்லவே கடிணமாக இருக்கும் இவை எளிதில் சீரணிக்க முடியாதவையாகவே இருக்கும். அதனால் அதனை ஒருபுறம் எடுத்து வைத்துவிட்டு சாதத்தை மட்டும் குழம்போடு சேர்த்து சாப்பிட்டேன். பட்டை தீட்டப்படாத அந்த அரிசி ருசியாக இருந்தது. புலிகள் சிறந்த போராளிகளாக இருக்கலாம் ஆனால, சமையலில் கொஞ்சம் மேசம்தான்.

உணவருந்தியபின் அனைவரும் உறங்க சென்றுவிட்டோம். நான் மரக்கட்டிலில் படுத்துக் கொண்டேன், கட்டிலில் நான் படுத்திப்பது என் பணியாட்கள் கீழே தூங்குவது போலவும் நான் இராணி போன்றும் ஓர் உணர்வை ஏற்படுத்தியது. நான் ஓர் அறையில் இருபது ஆண்மகன்களுடன் இருப்பது என் பெண்மைக்கான பாதுகாப்பற்ற தண்மையையோ அல்லது பயத்தையோ எற்படுத்தவில்லை. இந்த புலி போராளிகளுக்கு ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் கற்ப்பித்து அதை பேணிவருவதற்காக பிரபாகரண் என்உள்ளத்தில் ஓர் உயர்ந்து நின்றார். புது டெல்லியின் மனித கலவைக்குள்தான் தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கின்றேன் மற்றும் சாலைகளில் பார்வையாலே துகில்லுரியப்பட்டருக்கின்றேன். ஆனால் இங்கு இவர்களிடம் காமம் கலந்த பார்வையோ, எண்ணமே அறவே இல்லை. என்னை ஒரு பெண்னாக கூட பார்காமல் அவர்கள் அறையில் உள்ள ஒரு பெருளைப் பார்பதது போன்ற ஒரு சராசரி பார்வையிலே பார்த்தனர்.

அன்று இரவு மிகவும் நன்றாக தூங்கினேன்.

Wednesday, March 19, 2008

வன்னிகாட்டுக்குள் புலிகளின் விருந்தோம்பலும் கண்ணியமும் - பகுதி அ

அப்பன் மவனே சிங்கன்டா: SRI LANKA -- "Land of Injustice-அனிதா பிரதாப்-வீடியோ.

திருவாளர் சின்னகுட்டியின் வீடியோ பதிவைபார்தபிறகு ISLAND OF BLOOD புத்தகம் ஒன்றை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். அதில் புத்தக ஆசிரியர் 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், விடுதலைப்புலிகளின் தலைவர் பிராபகரன் அவர்களை பேட்டி எடுக்கும் பொருட்டு யாழ்பாணம் செல்லமுயல்கிறரர் ஆனால் அப்பொழு அங்கு அமைதிகாக்கும் (எதனை காத்தனர் என்று பிறகு பார்போம்.) பொருட்டு சென்ற இந்திய ராணுவம் இந்திய பத்திரிக்கையாளர்கள் யாழ்பாணம் செல்ல தடைவித்திருந்தது.


அதனால் அனிதா பிரதாப் வவுனியா சென்று அங்கிருந்து காட்டின்னூடாகவும், மக்கள் மற்றும் இந்திய இராணுவம் அதிகம் இல்லாத பகுதியூடாகவும் யாழ்பாணம் செல்ல வவுனியா நகரின் புலிகளின் கட்டளை தளபதி தினேஷ் யோசனை கூறி அதற்கு வழிவகையும் செய்தார்.


அனிதா பிரதாப் மற்றும் இந்தியா டுடேயின் புகைப்படகாரர் "ஷாம் டெக்வானி" இரண்டு புலிகளின் துணையோடு ஒரு மழை நாளில் வவுனியா காட்டினுடே தமது பணத்தை துவக்கினர். இவர் உழவுஇயந்திரம் (நம்ம ஊர் டிரக்டர்) முதல் மிதிவண்டி, கால் நடையாகவும் தமது பயணத்தை மேற்கொண்டனர். மயிர்யிழையில் உயிர் தப்பிய சம்பவம் உட்பட பல இன்னல்களை கடந்து, சேறும் சகதியும் அப்பியபடி தமது முதல் நாள் பயணத்தை நடு காட்டினில் நிறைவு செய்கிறார். இனி அவரது அனுபவத்தை அவரது சொல்லில் கேட்போம்.

பின் வரும் பகுதி அனிதா பிரதாப்பின் ISLAND OF BLOOD புத்தகத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.

========

அன்று விரைவில் இருள் கவிழ்ந்து விட்டது, கிட்டதட்ட ஏழு மணிவாக்கில் அடர்ந்த காட்டினூள் இருந்த விடுதலை புலிகளின் உறைவிடைத்தை அடைந்தோம். அங்கு கிட்டதட்ட ஐந்து அல்லது ஆறு புலிகள் இருந்திருப்பர். அந்த சிறு வீடு ஓரு முற்றமும், காய் கறிசெடிகளும், பழவகை மரங்களும் அடங்கிய சிறு தோட்டம் இருந்தது. பெறிதும் சிறிதும்மாக இரண்டு அறைகள் அந்த வீட்டில் இருந்தது. அந்த சிறிய அறையில் அரிசி குவியல், சிறிது வெங்காயம் மற்றும் சில உணவு பொருட்களும் இருந்தன. பெரிய அறையில் கரும் பலகையில் ஆன கட்டிலில் படுக்கையும், மடித்து வைக்கப்பட்ட சில பாய்களும், துணிகளை தொங்கவிடுவதற்காக அறையின் குறுக்காக கட்டப்பட்டு இருந்த கயிற்றில் இரு கட்டம் போட்ட சில லுங்கிகளும் தொங்கவிட பட்டிருந்தன. லாரி பேட்டரி மூலம் ஒற்றை டியூப் விளக்கு மங்கிய நிலையில் அந்த அறையை ஒளியூட்டிக் கொண்டிருந்தது.

'நீங்கள் படுக்கையை எடுத்து கொள்ளலாம், நாங்கள் தரையில் படுத்து கொள்கின்றோம்' என அந்த அணியின் தலைவர் கூறினார்! இது பெண்னாய் இருப்தனால் கிடைக்கும் சொவுகர்யம். 'நாங்கள் சமைக்க துவங்குகிறோம், சமையல் முடிய ஒரு மணிநேரம் ஆகும், உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா?' என தமிழில் கேட்டார்!

'நான் குளிக்க வேண்டும், முதல் வேளையாக என் மேல் உள்ள இந்த சகதியை கழுவ்வேண்டும்' என்றேன்.

'நீங்கள் கிணற்றுக்கு போய் குளிக்கலாம்' என்றார் அவர்!

நடுகாட்டினில் குளியல் அறையை எதிர் பார்பது அர்தம்மற்றது. இருப்பினும் இரவில் திறந்த வெளியில் குளிப்பதற்கு எனக்கு தயக்கம் எதும் இல்லை. பாம்புகள் இருக்கலாம், இருப்பினும் வேறுவழி இல்லை. எனது துண்டு, சோப்பு சாம்பூ மற்றும் மாற்று துணியை எடுத்து கொண்டு கிணத்தடிக்கு சென்றேன். ஒரு புலி போராளி இரண்டு வாளி தண்ணீரை இறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். மறைவுக்கு ஒரு தட்டி கூட இல்லாத நிலையில் எனக்கு குளிக்க தயக்கம் ஏற்பட்டது. விடுதலை புலிகள் காமத்தை தியாகம் செய்தவர்கள் என்பது எனக்கு தெரியும், இருப்பினும் எப்படி இருபது வாலிபர்களுக்கு முன் பிறந்த மேனியோடு குளிப்பது ? சேறும் சகதியும் அப்பிய நிலையில் ஆடைகளோடு குளித்தாலும் நான் சுத்தம்மாவது எப்படி?


நான் கோபம், தயக்கம் மற்றும் உதவிகளற்ற நிலையை அடைந்தேன். நான் குளிப்பதை பற்றி சிந்திப்பதைவிட புலி போராளிகளுக்கு கவலை படுவதற்கு பல்வேறு விசங்கள் உண்டு. வேறு வழியின்றி புலிகளின் அணித்தலைவனிடம் என்குழப்பத்தை தெரியபடுத்தினேன். பொருமையோடு கேட்ட அவர் ஒருகணம் யோசித்துவிட்டு இரு இளம் புலிகளை அழைத்து ஒரு எளிய யேசனையை தெரிவித்தார். ஒரு ஜமுக்காளம் துணியை திரைபோல் உயரபிடித்து கொண்டனர் அவ்விருவறும். இது புலிகளின் உறைவிடத்தில் இருப்பவர் பார்வையில் இருந்து என்னை பாதுகாத்தது.



நான் ஆடைகளை களைகையில் அந்த இரு இளம் புலிகளும் நான் இருக்கும் திசையை நோக்கி திரும்பாமல் இருக்கிறார்களா பார்த்தேன். எனக்கு நேர் எதிர் திசையில் பார்த்தவாரு ஒருவருக் கொருவர் ஐந்து அடி இடைவெளியில் நின்று ஜமுக்காளத் துணியை பிடித்து கொண்டு நான் இல்லாதை போல் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்ததை பார்த்து நான் தேவையில்லாமல் கவலையுருகிறேன் என்பதை உணர்தேன். பிறகே, ஆடைகள் முழுவதும் களைந்து தண்ணீரை என் மேல் ஊற்றினேன். நீரின் குளிர்தாங்காது நான் இட்ட கூச்சலில் இரு புலிகளும் அவர்களுக்குள் நகைத்துக்கொண்டணர், அதற்கு பிறகு கூச்சல் இடாமுடியாதபடி வாயை முடிக்கொண்டு சில குடுவை தண்ணீரை மேல் ஊற்றிய பிறகு என் உடல் தண்ணீரின் குளிருக்கு பழகிக்கொண்டது.

====

தெடரும்.....

Monday, February 04, 2008

ஈழத்து போரில் ஒரு ஏழை மனிதன்(சிங்களத்தான்) படும் பாடு

இலங்கையில் போர் எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமடைந்துள்ளது. அரச படைகளுக்கும், புலிகளுக்கும் நடக்கும் மோதலல் சராசரி மக்கள் தங்களது அடிப்படை உரிமைகள், வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிர்கதியாக்கப்படுள்ளனர். அதிகார மையங்களின் ரத்தமோகத்தின் முதல் பலி அப்பாவிகளின் வாழ்க்கை என்பது இலங்கையில் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.





மகிந்த ராஜபக்சேயின் போர் அணுகுமுறைக்கு சிங்கள சராசரி மக்களிடமும், அறிவு ஜீவிகளிடமும் ஆதரவு இல்லை. அவர்கள் போரை வெறுக்கிறார்கள். தனது அரசுக்கு சவாலாக இருக்கும் இந்த எதிர்ப்பை ராஜபக்சே கண்டித்திருக்கிறார். ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிங்கள குடிகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்த செய்தி இரண்டு நாட்களுக்கு முன்பு பத்திரிக்கைகளில் வெளிவந்தன.

இலங்கை அரசுக்கு எதிரான சிங்கள மக்களின் இந்த மனநிலையை அழுத்தமாக பதிவு செய்த திரைப்படம் பிரசன்ன விதானகேயின் 'பெளர்ணமி இரவில்' (புரஹந்த களுவர). அடிப்படை வசதிகள் இல்லாத விவசாயிகளும், விறகு வெட்டிகளும் நிறைந்த சிங்கள கிராமம் ஒன்றில் வசிப்பவர் வன்னிஹாமி என்ற கிழவர். முழுதாக பார்வையிழந்தவர். கிழவரின் ஒரே மகன் பண்டாரா ராணுவ வீரனாக யுத்த முனையில் இருக்கிறான்.
ஒரு நாள் கிழவரின் வீட்டிற்கு ராணுவ வாகனம் ஒன்று வருகிறது. அதிலிருந்து இலங்கையின் தேசிய கொடி போர்த்திய சவப்பெட்டி இறக்கப்படுகிறது. கிழவர் வன்னிஹாமின் மூத்த மகள் தனது தம்பியின் முகத்தை ஒருமுறையேனும் பார்க்க வேண்டும் என கெஞ்சுகிறாள்.

சவப்பெட்டியுடன் வந்த ராணுவ அதிகாரிகள், சவப்பெட்டியை மூடி ராணுவ முத்திரை வைத்திருப்பதால் மூத்த மகளின் கெஞ்சலை நிராகரிக்கின்றனர்.
சடங்குகள் முடிந்து சவப்பெட்டி புதைக்கப்பட்டதற்கு மறுநாள் கிழவருக்கு அவரது மகன் எழுதிய கடிதம் ஒன்று வருகிறது. விரைவில் விடுமுறையில் ஊருக்கு வருவதாகவும், தங்கையின் திருமணத்தை அப்போது முடிப்பதாகவும் அதிலுள்ள செய்தியை அறிந்துகொள்ளும் கிழவர். தனது மகன் இறக்கவில்லை இன்னும் உயிருடன் இருப்பதாக நம்புகிறார். அந்தக் கடிதம் அவரது மகன் இறப்பதற்கு முன்னால் எழுதப்பட்டது என்று அவரது மகள்கள் கூறுவதை கிழவர் ஏற்றுக் கொள்வதாயில்லை.

இந்நிலையில், பண்டாராவின் உடன் பணிபுரிந்த சக வீரர்கள் சிலர் தங்களுக்குள் சேகரித்த சிறு தொகையுடன் கிழவரை காண வருகிறார்கள். பண்டாராவின் மூன்றாவது மாத நினைவு நாள் செலவிற்கு கொடுப்பதற்கே அந்தத் தொகையை கொண்டு வருகிறார்கள்.

இந்தச் சம்பவம், மகன் இறக்கவில்லை என்ற கிழவரின் நம்பிக்கையை அசைத்து விடுகிறது. அவர் ஒரு முடிவுடன் மண்வெட்டியால் மகன் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டத் தொடங்குகிறார். யார் தடுத்தும் கிழவரின் வேகம் மட்டுப்படவில்லை. ஒருகட்டத்தில் கிழவரின் இளைய மகளின் காதலன் கிழவரிடமிருந்து மண்வெட்டியை வாங்கி தானே சவக்குழியை தோண்டுகிறான்.

ராணுவ முத்திரையை உடைத்து, சவப்பெட்டியை திறக்கும் முன் குழந்தைகளை விலகிப் போகச் சொல்கிறார்கள். பெட்டி திறக்கப்படுகிறது. உள்ளே ஒரு கல்லும் இரண்டு காய்ந்த வாழைத் தண்டுகளும் இருக்கின்றன.
'யுத்தத்தில் இறந்த ராணுவ வீரனின் சவப்பெட்டியை அவனது ஊரார் திறந்து பார்த்தபோது அதில் வாழைத் தண்டும் மாட்டு இறைச்சியுமே இருந்தது' என்ற பத்திரி¨ செய்தியின் அடிப்படையில் 'பெளர்ணமி இரவில்' படத்தை இயக்கியிருந்தார் வீதானகே.

யுத்தமானது சராசரி மக்களின் மீது 'திணிக்கப்பட்ட' ஒன்று என்பதை எந்த பிரச்சார அலங்காரமும் இன்றி இப்படம் பதிவு செய்கிறது. போர்முனையில் நிறுத்தப்படுகிற ஒவ்வொரு சிங்களனும் ஏழை விவசாயிகளும், தொழிலாளிகளுமே என்பதை இப்படம் தெளிவுற நிறுவுகிறது. படத்தில் கிழவரின் இளைய மகளின் காதலன், பண்டாராவின் மரணம் நிகழ்ந்த சில நாட்களிலேயே ராணுவத்தில் சேர ஆயத்தமாமகிறான். காரணம் தேசபக்தியோ வேறு எதுவோ அல்ல, வறுமை! இந்த காட்சியில் அரசியல்வாதிகள் பேசும் தேசபக்தி விதானகேயால் கட்டுடைக்கப்படுகிறது.

படத்தில் வரும் கிராமத்து புத்த பிட்சு நீங்கலாக யாரும் போர் மீது ஆர்வமாகவோ, ராணுவத்தின் மீது மரியாதையாகவோ இருப்பதாக காட்டப்படவில்லை. சிங்கள ராணுவம் தனது குடிகளை எவ்வாறு ஏமாற்றுகிறது, போர் சராசரி மக்களின் வாழ்வை எப்படி குலைத்துப் போடுகிறது என்பதை கலை அமைதியுடன் வெளிப்படுத்திய இப்படம் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டது. (இந்தியாவில் ராணுவத்தை விமர்சிக்கும் இப்படியொரு கதையை எண்ணிப் பார்க்கக்கூட முடியாது என்பது கவனிக்கத்தக்கது).

இதனிடையில் உலகத் திரைப்பட விழாக்களில் 'பெளர்ணமி இரவில்' பல விருதுகளை வென்றது. ஒரு வருடம் விதானகே நீதிமன்ற படிகள் ஏறிய பிறகு படத்திற்கான தடை இலங்கையில் விலக்கப்பட்டது. மேலும், இலங்கையின் ஐந்து தேசிய விருதுகளையும் நான்கு'சரசவிய' விருதுகளையும் வென்றது.

போர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல. அது இருபக்கமும் கூரான வாள். இரு தரப்பிற்குள்ளும் ஆழ ஊடுருவி மாறாத வடுக்களை ஏற்படுத்தக் கூடியது. சராசரி ஏழை மக்களிடம் போருக்கான முனைப்பு ஏதுமில்லை. அவர்கள் போருக்கான சிந்தனையிலிருந்து வெகு தொலைவில் வாழ்கிறார்கள். அதே நேரம், அதிகார மையங்கள் முன்னெடுத்துச் செல்லும் போரால் பாதிக்கப்படும் முதற் ஆளாய் அப்பாவி மக்களே இருக்கிறார்கள்.
விதானகேயின் படம் சொல்லிச் செல்லும் சேதி இது.



கலையை ஒரு நதியென உருவகித்துக் கொண்டால் மேற்பரப்பில் நீந்துகின்ற கலைஞர்களும் உள்ளனர். அதேவேளை அடியாழத்தில் சுழித்தோடும் கலைஞர்களும் உள்ளனர். இந்த ஆழச் சுழித்தோடும் கலைஞர்களின் வரிசையில் இருக்கவே நான் விரும்புகிறேன். ஏனெனில் மனிதாபிமானம், உண்மை, நீதி என்பவற்றில் எப்போதுமே நான் பற்றுறுதி கொண்டுள்ளேன்".

- இயக்குனர் பிரசன்ன விதானகே.

நன்றி :- வெப் உலகம் (வெப்துனியா தமிழ்)

Tuesday, January 22, 2008

தி.மு.க அரசை கலைக்க வேண்டும்! செல்வி ஜெ.ஜெயலலிதா

முன்னால் முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு 'தி.மு.க' அரசை கலைக்க வேண்டும் எனும் அறிக்கையை நாள்தோரும் விடவில்லை என்றால் தூக்கம் வாரது போலும். அவர் இதுவரைவிட்ட தி.மு.க அரசு கலைப்பு அறிக்கையை ஆவணப்படுத்த முயல்கிறேன் உங்களுக்கு தெறிந்த தேதிகளில் அம்மையார் இவ்வாரு அறிக்கைவிட்டிருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் அதையும் இவ்வரிசையில் சேர்த்து விடுவோம்!

May 16, 2008

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் ராஜிநாமா செய்ய வேண்டியது கருணாநிதிதான் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
(thatstamil.com)

Feb 13, 2008

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையவும், தீவிரவாதத்தைத் தடுக்க தவறியதற்காகவும் திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தமிழகத்தில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்ய வேண்டும். (அ.தி.மு.க செயற்குழு கூட்டம்).

Jan 22, 2008

விடுதலைப் புலிகளால் ஆபத்து தமிழக அரசை கலைக்க வேண்டும் - அ.தி.மு.க. செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை (puthinam.com)

Jan 21, 2008

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு பல்வேறு நபர்கள் தானமாக அளித்த பசு மாடுகள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. தீவனங்கள் சரிவர கொடுக்கப்படுவதில்லை. இதன் காரணமாக 15 மாடுகள் இறந்து விட்டது இதற்கு பொருப்பேற்று திரு. மு.கருணாநிதி பதவி விலகவேண்டும். தி.மு.க அரசை கலைக்க வேண்டும். (dinamalar.com)

Monday, January 21, 2008

இதை பார்தபின் கண்ணீர் வரவில்லை என்றால் சொல்லுங்கள்.


http://video.google.com/videoplay?docid=5284960075003286933

வாயும் வயிரும்தான் பர்கரும், பீட்சாவும் சப்பிட பழகிடுச்சு. மனசு என்னோமோ அப்பிடியேதான் இருக்கு.

Thursday, January 17, 2008

July 23, 1983 மீண்டும் வருமா?


நேற்று உடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் சிங்கள அரச அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளருமான மைதிரிபால சிறிசேன பின் வருமாறு ஒரு விடையத்தை தெரிவித்தார்.

//-----
பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதன மூலமாக மக்கள் 83 ஆம் ஆண்டு நிலைமைக்கு திரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு பயங்கரவாத செயற்பாடுகளின் 25 வருடகால அனுபவங்கள் இருக்கின்றன என்பதனால் மக்கள் அச்சமடைந்து மனம்தளரமாட்டார்கள்.

முழுவிவரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்

---//


"பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதன மூலமாக மக்கள் 83 ஆம் ஆண்டு நிலைமைக்கு திரும்ப மாட்டார்கள். "

என்று சொல்லுவதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகின்றார் ?

1. சிங்கள மக்களை மற்றும்மொரு இனக்கலவத்துக்கு தயாராக சொல்கின்றரா?

2. அல்லது சிங்கள மக்கள் முற்றிலும் மனமுதிர்சி அடைந்துள்ளனர் அதனால் நாட்டில் நடக்கும் தாக்குதலுக்கு அஞ்சமாட்டார்கள் என்கிறாரா?


பதில் தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே!