Friday, December 12, 2008

வல்லினம், மெல்லினம், இடையினம்

எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது இந்த வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் ?

தமிழ் இலக்கணத்தில் முதல் பாடத்திலே வருவது. உங்களால் சரியாக சொல்ல இயலுகின்றதா என ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்!

.
.
.
.
.
.
.

இல்லையேனில் இதோ!

வல்லினம்

மெய்யெழுத்துக்கள் பதினெட்டில், முயற்சியுடன் வலித்து ஒலிக்கப்படும் க், ச், ட், த், ப், ற் என்ற ஆறு எழுத்தும் வல்லினம் ஆகும். இவற்றை ஒலிக்கும்போது மூச்சுக காற்று மார்பிலிருந்து வலுவாக வருகிறது.

மெல்லினம்

அதிக முயற்சியின்றி மூக்கினால் மெலிந்த ஓசையுடன் ஒலிக்கப்டும் ங், ஞ், ண், ந், ப், ன் என்ற ஆறு எழுத்தும் மெல்லினம்

இடையினம்

மூக்கிற்கும் மார்புக்கும் இடையே மிடற்றினின்றும் ஒலிக்கப்படும் ய், ர், ல், வ், ழ், ள் என்ற ஆறு எழுத்தும் இடையினம்

1 comment:

வெற்றி said...

அடடே!
இவன்,
துப்பரவாய் மறந்து போன சங்கதியை ஞாபகப்படுத்தியிருக்கிறீங்கள்.

மிக்க நன்றி.