Showing posts with label தமிழீழம். Show all posts
Showing posts with label தமிழீழம். Show all posts

Friday, January 02, 2009

வீழ்ந்தது கிளிநொச்சியாயினும், எழுவது தமிழனாய் இருக்கட்டும்

கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது! தமிழ் தேசத்தின் தலைநகரம் துரோகிகளின் துணையோடு சிங்களவனிடம் வீழ்ந்துவிட்டது. ஆம் இது தமிழனுக்கான தோல்விதான், பின்னடைவுதான், அதனால் என்ன? இன்றும், என்றும் வீழாது குறையாது இருப்பது தமிழனின் நெஞ்சுரமும் அவனது விடாது போராடும் குணமும்தான் அப்படியே இருக்கிறதே.

சோர்ந்து போகாதீர்கள் சொந்தங்களே, தமிழ் தேசத்தை விடுவிப்பதற்கான பொருப்பை ஈழத்தில் வாழும் சொந்தங்களுக்கும், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு மட்டும்தான் என இருந்துவிட வேண்டாம். தற்பொழுது நடக்கின்ற யுத்தம் இறுதியுத்தம் என யாவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் ஈழத்தில் நடக்கின்ற யுத்தம் மட்டுமே தமிழீழத்தை பெற்றுத் தந்துவிடாது. தமிழீழம் என்ற அங்கீகரிக்கப்பட்ட தேசத்திற்கான யுத்தம் என்பது உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் நடத்தப்பட வேண்டியது, அது கருத்தியல் மற்றும் உரிமை மீட்புயுத்தமாகும்.

இவ்வுத்தத்தி்ன் ஆயுதம் நமது அறிவு, போராளிகள் இதை படிக்கின்ற நீங்களும், இதனை எழுதிய நானும் மற்றும் ஒவ்வொரு தமிழனும்தான். இவ்வுத்தத்தில் தாக்கப்பட வேண்டியது சிங்கள அரசின் பொய்யுரைகள், மனித உரிமை மீறல்கள், பேரினவாதம், சம உரிமை மறுப்பு, போரியல் குற்றங்கள் என்பவையே. நாம் வென்று கைப்பற்ற வேண்டிய களம் என்பது வலைப்பதிவில் தொடங்கி, சிங்கள ஆட்சிக்கு எதிரான தெருமுனை கூட்டங்கள், ஊர்வலங்கள், அரசியல் தலைவர்கள் சந்திப்புகள் வழியாக ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று தமிழர்களின் அங்கீகாரத்தை பெறுவதுதான்.

தயவு செய்து தங்களது பங்களிப்பை வலைப்பதிவுடன் நிறுத்தி விட வேண்டாம், நாம் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்று தமிழீழ விடுதலையை விரைவுபடுத்துவோம். இப் போராட்டத்திற்கான பொருப்பு உங்களதும் என்னுடையதுமாகும்.


இவ்வேலையில் நான் என்றோ எங்கோ படித்தது  ஒன்று என் ஞாபகத்திற்கு வருகின்றது.

அடங்கா யானை போல் அதிரடி கலகம் செய்
அழிவினில்தான் ஆக்கம்முண்டாம் ஆதலால் தியாகம் செய்!

 

Wednesday, December 24, 2008

புலிகளிடம் இருந்து நாங்கள் வாங்கியவை...

தமிழீழத்திற்கு எப்பொழு எல்லாம் ஆதரவு குரல் எழுகின்றதோ, அப்பொழுது எல்லாம் மக்கள் போராட்டம் என்றால் கிழோ என்ன விலை எனக் கேட்கும் காங்கிரஸ்காரர்கள் பாடும் பல்லவியில் ஒன்றுதான்..

'நெடுமாறன், வைகோ மற்றும் திருமாவளவன் முதலியோர் விடுதலை புலிகளிடம் இருந்து பணம் பெற்றுவிட்டு தமிழீழ ஆதரவு குரல் எழுப்புகின்றனர்' என்பது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, அன்மையின் திருமாவளவன் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.


'புலிகளிடம் நாங்கள் நிறைய வாங்கி இருப்பது உண்மைதான். 'எதற்கும் அஞ்சாதநெஞ்சுறுதி... குலையாத கொள்கை வெறி... இனத்தைக் காக்க இன்னுயிரையும் ஈயத்தயங்காத தைரியம்...' இப்படி புலிகளிடமிருந்து நிறைய வாங்கி இருக்கிறோம்'.


கேள்வி;- ''புலிகளால் கிடைக்கும் ஆதாயங்களுக்காகத்தான் நீங்கள் ஈழ விவகாரத்தில்இவ்வளவு அக்கறை காட்டுவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு பற்றி...''

பதில்;- ''புலிகளுக்கு யானைப்பசி. எத்தனை கோடிகள் அவர்களுக்குக் கிடைத்தாலும்,அவர்களின் தேவையைத் தீர்க்க முடியாது. அவர்கள் நடத்தும் யுத்தம்...அவர்கள் நடத்தும் அரசாங்கம்... புதிய நாட்டை உருவாக்க அவர்கள்மேற்கொள்ளும் முயற்சி... இதற்கெல்லாம் எத்தனையோ கோடிகள் தேவைப்படும்.புலிகளிடம் நாங்கள் நிறைய வாங்கி இருப்பது உண்மைதான். 'எதற்கும் அஞ்சாதநெஞ்சுறுதி... குலையாத கொள்கை வெறி... இனத்தைக் காக்க இன்னுயிரையும் ஈயத்தயங்காத தைரியம்...' இப்படி புலிகளிடமிருந்து நிறைய வாங்கி இருக்கிறோம்.அவர்களுக்கு துளியளவு உதவிகளைக்கூட எங்களால் செய்ய முடியவில்லையேஎன்பதுதான் எங்களின் மகா வேதனை. புலிகளிடம் கையேந்தி கட்சியை வளர்க்கும்நிலை எங்களுக்குக் கிடையாது. யதார்த்தத்தில் யாருக்கும் உதவுகிற நிலையில்புலிகளும் இல்லை. ஆதாயப் புகார்களைக் கிளப்புபவர்களைப் பார்த்து நான்ஆத்திரப்படவில்லை... அனுதாபப்படுகிறேன்.''

நன்றி;- ஜூனியர் விகடன், 28-12-08 -ம் நாள் பதிப்பு.